யாழ்ப்பாணம்- சங்கானை பகுதியில் காணாமல்போன ஆறு வயதுச் சிறுவன், வெள்ள வாய்க்காலில் வெள்ளத்தில் மூழ்கிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
சங்கானை ஸ்தான அ.மி.தக பாடசாலையில் தரம் ஒன்றில் கல்வி பயிலும் ஆறு வயதுடைய நிறோஜன் ஸ்டீபன் என்ற சிறுவனே சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
நேற்று மதியத்திலிருந்து சிறுவனை காணவில்லை என உறவினர்கள் தெரிவித்ததையடுத்து அப்பிரதேசத்தில் மக்கள் தேடுதலில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில் நேற்று இரவு 9.30 மணியளவில், அப்பகுதியிலுள்ள வெள்ள வாய்க்காலில், வெள்ளத்தில் மூழ்கிய நிலையில் சடலமாக கண்டெடுக்கபட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மானிப்பாய் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.